சென்னை :
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ள நடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியா, தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்துக்கிடையில் பகிர்ந்த உருக்கமான பதிவால் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளார்.
ஆண்ட்ரியாவின் கலை பயணம் :
2009-ம் ஆண்டு ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ஆண்ட்ரியா, பின்னர் விச்வரூபம், வடசென்னை, அரண்மனை உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்ததோடு, பின்னணி பாடகியாகவும் வெற்றி பெற்றுள்ளார். அவரது குரலும், ஸ்டைலும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனி இடத்தைப் பிடித்துள்ளது.
போர் குறித்த பதிவு :
தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவும் துரதிருஷ்டமான போர் சூழ்நிலையைக் கொண்டாடும் விதமாக பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கவிதை வடிவ உருக்கமான செய்தியை பகிர்ந்துள்ளார்.
“போர் முடிவடையும். தலைவர்கள் கைகுலுக்கிக் கொள்வார்கள். தாய் தனது தியாக மகனுக்காகக் காத்திருப்பாள். பெண் தனது அன்பான கணவருக்காகக் காத்திருப்பாள்.” என்று அவர் பகிர்ந்துள்ள அந்த பதிவுக்கு பலர் வரவேற்பும், எண்ணங்களை வெளிப்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் தாக்கம்:
இந்த உருக்கமான செய்தி ரசிகர்களிடையே வேகமாக வைரலாகி வருகிறது. போரை சித்தரிக்கும் நேரத்தில் மனித உணர்வுகளை முன்னிலைப்படுத்திய ஆண்ட்ரியாவின் இந்தப் பதிவு பலரின் மனதையும் உருக்கும் வகையில் அமைந்துள்ளது.