கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்க செய்ய பல்லாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும், இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தை கண்டித்து, குத்தகை விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு:-
மயிலாடுதுறை மாவட்டம், சேந்தங்குடி பகுதியில், தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான இடம் என்று கூறி அரசு புறம்போக்கு நிலத்திற்கு அடிமனை வாடகை வசூல் செய்யும் தருமபுரம் ஆதீன நிர்வாகத்தை கண்டித்தும், கோயிலுக்கு சொந்தமான இடங்களில் பெயர் மாற்றம் செய்ய இந்து அறநிலையத்துறை சார்பில் பல லட்ச ரூபாய் லஞ்சம் கேட்பதை தடுத்து நிறுத்த கோரியும், மின் இணைப்பு பெறுவதற்கு தடையில்லா சான்று வழங்க ஆயிரக்கணக்கான ரூபாய் லஞ்சமாக பெறுவதை தடுக்க வலியுறுத்தியும், மயிலாடுதுறையில் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான வதானேஸ்வரர் ஆலயம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான அடிமனைப் பயனாளிகள் விவசாயிகள் பங்கேற்றனர். மாவட்டத் தலைவர் பக்கிரி சாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில பொருளாளர் துரைராஜ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.
தமிழக அரசு இந்த பிரச்சினைகள் தலையிட்டு அரசு நிலத்தை திரும்ப தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.














