சீர்காழி அருகே பயிர் கடனை அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள ஆச்சாள்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு, விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் மத்திய,மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, விவசாயிகள் பெற்ற மத்திய பயிர்க் கடன்கள் அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்,2025-26 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும் லிட்டர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆச்சாள்புரம், ஆரப்பள்ளம், ஆலயசுந்தரம் மற்றும் கடைக்கண் விநாயகநல்லூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். கொள்ளிடம் வட்டார விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் சூப்பராயன் பிள்ளை இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையில் விவசாயிகளும் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு, விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கூட்டுறவு வங்கிச் செய லாளர் வினோத் அவர்களிடம் விவசாயிகள் நேரில் வழங்கினர்.













