மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின, மாநிலம் முழுவதும் இருந்து 579 போட்டியாளர்கள் பங்கேற்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பேட்மிட்டன் அசோசியேஷன் ஆஃப் மயிலாடுதுறை சார்பில், 2026 ம் ஆண்டுக்கான, 15 வயதுக்குட்பட்டோருக்கான தமிழ்நாடு மாநில சப் ஜூனியர் பேட்மிட்டன் விளையாட்டுப் போட்டிகள் நேற்று துவங்கின. வரும் 25ம் தேதி வரை 6 நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் 579 போட்டியாளர்கள் கோவை சென்னை மதுரை திருச்சி நாமக்கல் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பங்கேற்று உள்ளனர். மொத்தம் 847 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், 15 வயதிற்கான ஆடவர் ஒற்றையர் போட்டி, மகளிர் ஒற்றையர் போட்டி, ஆடவர் மற்றும் மகளிர் காண தனித்தனியான இரட்டையர் போட்டிகள், கலப்பு இரட்டையர் போட்டிகள் ஆகிய ஐந்து பிரிவுகளில் கோட்டைகள் துவங்கிய நடைபெற்று வருகின்றன. முதல் நாளில் 253 போட்டிகள் நடைபெற்ற நிலையில், இரண்டாவது நாள் போட்டியை மயிலாடுதுறை மாவட்ட இறகு பத்து கழக தலைவர், அசோக் குமார் துவக்கி வைத்தார். நாக் அவுட் முறையில் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டிகளை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.













