நுகர்வோர் நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்திலேயே செயல்படுத்தக் கோரி வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்.
:-
விழுப்புரத்தில் செயல்பட்டு வந்த நுகர்வோர் நீதிமன்றம் திருவண்ணாமலைக்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விழுப்புரம் வழக்கறிஞர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக இன்று நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், விழுப்புரம் நீதிமன்ற வளாகம் எதிரே உள்ள சென்னை சாலையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரத்தில் செயல்பட்டு வந்த நுகர்வோர் நீதிமன்றத்தை தொடர்ந்து விழுப்புரத்திலேயே செயல்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். நுகர்வோர் நீதிமன்றம் விழுப்புரத்திலிருந்து நீண்ட தொலைவில் உள்ள திருவண்ணாமலைக்கு மாற்றப்பட்டுள்ளதால், வழக்குகளை சந்திக்க வரும் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையான சிரமங்களுக்கு உள்ளாக நேரிடும் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். எனவே, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு நுகர்வோர் நீதிமன்றத்தை மீண்டும் பழையபடி விழுப்புரத்திலேயே செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றனர்.
வழக்கறிஞர்கள் பேட்டி உள்ளது காளிதாஸ்













