திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய தமிழக வெற்றி கழகத்தினர் – அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி செய்த தமிழக வெற்றி கழகத்தினரால் அவதி..
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 3 அமைச்சர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அமைச்சர்கள் வந்து இறங்கிய உடனே அவர்களை சூழ்ந்து கொண்ட தமிழக வெற்றி கழகத்தினர் அமைச்சர்களுக்கு சால்வை மற்றும் பொன்னாடைகளை அணிவித்து செங்கோட்டையன் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுச் சென்றனர்.
மேலும் நூற்றுக்கணக்கான தமிழக வெற்றி கழகத்தினர் தங்களது செல்போனில் அதனை ரிலீஸ் ஆக பதிவிட்டு கொண்டிருந்தனர்.
இதனால் அமைச்சர்களை வரவேற்க காத்திருந்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சருக்கு அணிவகுப்பு மரியாதை செய்ய காத்திருந்த காவலர்கள் ஆகியோர் செய்வதறியாமல் திகைத்தனர்.
அரை மணி நேரத்திற்கு மேலாக மூன்று அமைச்சர்களை சூழ்ந்த தமிழக வெற்றிக்கழகத்தினர், அங்கிருந்து அமைச்சர்களை நகர விடாமல் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்தனர். இதனால் இது கலெக்டர் அலுவலகமா அல்லது கட்சி அலுவலகமா என கேள்வி எழும்பியது.













