சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை விவகாரத்தில் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி, மற்றம் தலைவர்கள் மீது அவதூறு செய்திகளை பரப்பும் சமூக விரோதிகளை கண்டித்து மயிலாடுதுறையில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் கோரிக்கை:-
மயிலாடுதுறை மாவட்டம் சாத்தங்குடியில் கடந்த மாதம் 30ம் தேதி வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த காதலர்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் ஜாதிய வன்கொடுமைக்கு எதிராக நீதிகேட்டு போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியினர் மீதும், அதன் மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் மீது அவதூறான செய்திகளை பரப்பும் சமூக விரோதிகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மயிலாடுதுறை ஆர்டிஓ அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் பி.சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஏ.சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அன்பரசன், மாவட்ட செயற்குழு ஸ்டாலின், துரைராஜ் உட்பட 100-த்திறம் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.. முன்னதாக கூறைநாடு டிஇஎல்சி பள்ளி அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு ஆர்டிஓ அலுவலகம் வந்து ஆர்ப்பாட்டத்’தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும், ஜாதியசக்திகளில் தவறான பிரச்சாரத்தில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது. ஜாதி அமைப்பு மீது அரசு கவனமாக இருப்பதோடு அவர்கள் மீது சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாதிய ஆணவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் இயற்ற வேண்டும். மக்களுக்காக போராடுபவர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், ஜாதிய சக்திகள், பிரிவினைவாதிகள், சமூக விரோதிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் ரத்து செய்ய வேண்டுமென்பது இந்திய இளைஞர்களின் கோரிக்கை, நீட் ஒரு அநீதியானது மாணவர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்குகின்றது. அதனை ரத்துசெய்ய வேண்டுமென்று நாடுமுழுவதும் போராடினார்கள். அதனால் மத்திய அமைச்சர் பதிவிலகியுள்ளார். நீட் எதிர்ப்புக்கான போராட்டத்தை மேன்மேலும் தீவிரப்படுத்துவோம். தவெக தேர்தல் வாக்குறுதி அளித்தப்படி விவசாயிகளுக்கான பயிர்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கடன்தள்ளுபடி முழுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். அப்படி செய்யவில்லை என்றால் போராட்டங்கள் வழியாக கடன்தள்ளுபடி பெற முயற்சிப்போம். டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. வேளாண்குடிமக்கள் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். டெல்டா விவசாயிகளுக்கு தண்ணீரை பெற்றுத்தரும் முயற்சியை மாநில அரசு செய்ய வேண்டும் என்றார்.
பேட்டி சாமுவேல்ராஜ் மாநில செயற்குழு உறுப்பினர்.













