இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஓரங்கட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். நடிப்பைதாண்டி, தயாரிப்பிலும் தன்னுடைய பயணத்தை தொடரும் சமந்தா தற்போது ‘சுபம்’ எனும் தெலுங்கு திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா, அட்லீ இயக்கத்தில் நடிப்பது குறித்து பலருக்கும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் வகையில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “அட்லீயும் நானும் நெருக்கமான நண்பர்கள். நிச்சயமாக எதிர்காலத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம். ஆனால், அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படத்தில் நான் நடிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
சமந்தாவின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால், சமந்தா–அட்லீ கூட்டணியில் எதிர்காலத்தில் எப்போது, எப்படியான படம் உருவாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.