விஜய் தொலைக்காட்சி மூலமாக பிரபலமானவர் தான் தொகுப்பாளினி ரம்யா. தொலைக்காட்சி மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் சில படங்கள் நடித்து உள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியன் மக்கள் இவரை பின்தொடர்கிறார்கள். அதில் இவர் தன்னை பற்றிய புகைப்படங்கள், விடீயோக்கள் உள்ளிட்டவையை பகிர்ந்து வருகிறார் .
இந்நிலையில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரம்யாவை ஆபாசமாக சித்தரித்து அவரது குரலிலும் சில மாற்றங்களை செய்து முகம் காட்டாத யாரோ ஒருவன் வீடியோ வெளியிட்டு உள்ளான். இதை கண்டு அதிர்ந்த ரம்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறி இருப்பது : என்னுடைய வீடியோவை ஏ ஐ மூலம் தவறாக சித்தரிப்பது இது மூன்றாவது முறையாகும் . சட்டத்துக்கு புறம்பாக இது மாதிரி வேலை செய்வது மோசடித்தனமாது . இந்த மாதிரி வேலைகளை நிறுத்திக்கொள்ளாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார்.