மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் என்ற பெயரில் குளங்களில் வண்டல்மண் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை மீறி அள்ளப்படுவதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை. ஆய்வு செய்ய கோரிக்கை:-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஶ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தலச்சங்காடு பகுதியை சேர்ந்த அருட்செல்வன் என்ற விவசாயி பேசுகையில்:-
விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்க அரசு அனுமதி அளித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் எல்லா கிராமங்களிலும் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் ஒரு விவசாயி கூட வண்டல் மண் எடுக்கவில்லை. விவசாயிகள் என்ற பெயரில் வண்டல் மண் எடுப்பதாக கூறி ஒவ்வொரு குளத்திலும் 20 அடி முதல் 25 அடி ஆழம் வரை மணல் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. நேரிடையாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்த வேண்டும் என்று கூறினார். தோட்டக்கலைத் துறையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அளித்த தகவல் படி கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு ஒரு கோடி ரூபாய்க்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு விதைகள் வழங்கப்பட்டுள்ளதாக கணக்கு எழுதப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வழங்காமல் விதைகளை யாருக்கு கொடுத்தீர்கள் என்றும், அரசு அறிவிக்கும் திட்டங்களை அன்றைக்கே விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும். எம்ஆர்பி விலையை விட அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டு மொத்த வியாபாரிகள் தான் உரம் அதிக விலைக்கு விறபனை செய்வதற்கு காரணமாக உள்ளனர். 1 டன் யூரியாவுக்கு 4000 ரூபாய்க்கு சிறப்பு சப்ளிமெண்ட்ஸ் கொடுக்கிறார்கள். இதை தடுக்க வேண்டும் என்றால் மாடிபடியை மேலிருந்து கூட்டுவது போல் மேலிருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கீழிருந்து மாடிப்படியை கூட்டினால் எப்படி இருக்குமோ அப்படி தான் உங்கள் நடவடிக்கை உள்ளது என்றார்.
















