குற்றவாளிகள் ஓடவும் ஒளியவும் முடியாது சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சார்பில் குற்றவாளிகளை கண்டறித்து எச்சரிக்கும் பொது அறிவிப்புடன் கூடிய 132 அதி நவீன கண்காணிப்பு கேமராக்கள் இயக்கம் மற்றும் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்த மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் 10 ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் நிறுவும் பணியும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமாரியில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சார்பில் 132 அதிநவீன சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளது
உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடற்கரை பகுதி, திரிவேணி சங்கம சன்ரைஸ் பாய்ண்ட், சன்னதி தெரு, படகு துறை, ரத வீதிகள், மெயின் ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கூட்டத்தில் இருக்கும் முன்னாள் குற்றவாளிகளை அவர்களின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு துல்லியமாக கண்டு பிடித்து எச்சரிக்கும் திறன் கொண்டது பொது அறிவிப்புடன் கூடிய இந்த கேமராக்கள் கண்காணித்து இயக்கம் மற்றும் நவீன கட்டுப்பாட்டு அறையையும் இன்று திறந்து வைத்த மாவட்ட எஸ்.பி.ஸ்டாலின் கூறுகையில்
கன்னியாகுமரி சுற்றுலா தலத்தில் 10 ஏ.என்.பி.ஆர் கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அவை இயக்கத்தில் வரும் என்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊர் காவல் திட்டத்தில் ஒரு ஆண்டில் 2800 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும்
நேற்று ஒரே நாளில் “ஆப்ரேஷன் ஷீல்ட்” என்ற பெயரில் பள்ளி கல்லூரிகளுக்கு அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 46 கடைகள் மூடப்பட்டு 1 கிலோ கஞ்சா 1000 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்














