இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சாமி தரிசனத்திற்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து நாகப்பட்டினத்தில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்து முன்னணி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் அபிராமி அம்மன் கோயில் திருவாசல் பகுதியில் திரளானோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்பாட்டத்தில், “இந்துக்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்ய கட்டணம் செலுத்துவது ஏன்? அனைத்து கோயில்களிலும் இலவச தரிசனத்தை உறுதி செய்ய வேண்டும்” என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாவட்ட துணைத் தலைவர் கோ.பிரபாகரன் தலைமை வகித்தார்.
இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக புதுவை மாநில கோட்ட செயலாளர் கணேஷ் , நாகை மாவட்ட செயலாளர் விவேக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் விஜய், சரவணன், இந்து முன்னணி நிர்வாகி செழியன், நாகை ஒன்றிய தலைவர் செந்தில்குமார் , நகரத் தலைவர் ரவிச்சந்திரன் கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் சூரிய நாராயணன், நாகை நகர செயலாளர் சேரலாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பக்தர்களின் உரிமையை பறிக்கும் தரிசன கட்டணத்தை அரசு உடனடியாக திரும்ப பெறாவிட்டால் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.














