சீர்காழி அரசு மருத்துவமனையில் 2 மாதமாக பழுதாகி போன சி.டி. ஸ்கேன் வசதி நோயாளிகள் அலைகழிப்பு உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் நாள்தோறும் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். இதனிடையே அரசு மருத்துவமனை அருகாமையில் சில மீட்டர் தூரத்தில் அதி தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்கள்,பெண்கள் வார்டுகள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்கு என 272 படுக்கை வசதிகளுடன் மூன்று அடுக்கு செயல்பட்டு வருகிறது. புதிய கட்டடங்கள் கட்டப்பட்டாலும் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இங்கு
புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிடி ஸ்கேன் வசதி கடந்த இரண்டு மாதமாக பழுது ஏற்பட்டு அவை செயல்பாட்டில் இல்லை இதனால் சிடி ஸ்கேன் எடுக்க வரும் நோயாளிகள் தனியார் மருத்துவமனை அல்லது சிதம்பரம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அலைகழிக்கப்படும் நிலை உள்ளது. வயதானவர்கள்
, கர்ப்பினிகள் பெரும் பாதிப்புக் இள்ளாகி வருகின்றனர் ஆகையால் சிடி ஸ்கேன் பழுதை நீக்கி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அதற்குரிய
டெக்னீசியன்கள் நியமனம் செய்திடவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.













