போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற மாரத்தான் போட்டியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுன் கலந்து கொண்டு 5 கிலோமீட்டர் தூரம் ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்தியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் அண்ணாமலையின் வீ தீ லீடர்ஸ் அமைப்பு சார்பில் போதை இல்லா தமிழகம் எனும் இலக்கை நோக்கி மாரத்தான் போட்டி பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் கலந்து கொண்டனர். ஆயில் மில் பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் ஓடி வந்து அரசு மருத்துவக் கல்லூரி சாலையில் நிறைவு பெற்றது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற நான்கு பேருக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்த மாரத்தான் போட்டியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுன் 5 கிலோ மீட்டர் தூரம் ஓடி வந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் போதைப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் தங்களும் தங்கள் குடும்பத்தாரும் பயன்படுத்த விடமாட்டோம்.. போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்றனர். இதில் வீ தி லீடர்ஸ் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் செயல்படும் மதுபான ஆலைகளை மூட வேண்டும் என்றும், வட மாநிலங்களில் இருந்து வரும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இளைஞர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்களிடம் இருந்து பிடுங்கிய பிரம்பை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
பேட்டி : பன்னீர்செல்வம் – வீ தீ லீடர்ஸ் பொறுப்பாளர்.















