திருவள்ளூரில் நடந்த, குதிரை வண்டி பந்தயத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த குதிரைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன.
திருவள்ளூர் அடுத்த விஷ்ணுவாக்கம் பகுதியில் தவெக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52 வது பிறந்தநாள் விழாவையொட்டி குதிரை வளர்போர் நல சங்கம் சார்பில் குதிரை வண்டி ரேக்ளா போட்டி போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் பிரகாசம் என்கிற குட்டி கலந்து கொண்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிறிய குதிரை, நடுத்தர குதிரை, பெரிய குதிரை, என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. இதில் பெரிய குதிரைகளுக்கு16 கிலோமீட்டர் துாரத்திற்கு நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம், 70 குதிரைகள் கலந்து கொண்டன. சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, வீரர்களை கைதட்டி உற்சாகப்படுத்தினர். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசுடன் நினைவு கோப்பையும், வழங்கப்பட்டன.















