2012 ஆம் ஆண்டு அன்பழகன் இயக்கத்தில் வெளிவந்த சாட்டை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பரிசுபெற்றவர் நடிகர் யுவன் (அஜ்மல் கான்). அதன் பின் கமர்கட்டு, கீரிப்புள்ள உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடித்திருந்தாலும், பெரிய அளவில் கவனம் பெறவில்லை. தொழிலதிபரான தந்தையின் மகனான யுவன், சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். ஆனால், அதன் பின் சினிமா உலகிலிருந்து மறைந்தார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் யுவன் தனது வேதனையை பகிர்ந்துள்ளார். “நான் இதுவரை 13 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் யாரும் என்னை கவனிக்கவில்லை. சினிமாவில் வெற்றி பெற ‘லக்கும்’ முக்கியம் என்பதைக் காலப்போக்கில் உணர்ந்தேன். சாட்டை படம் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் அதன் பிறகு நான் நடித்த படங்கள் பெரும்பாலும் இன்னும் வெளியே வரவில்லை,” என்கிறார் யுவன்.
மேலும் அவர் கூறுகையில், “சாட்டை படத்திற்குப் பிறகு இயக்குநர் பாலாவின் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்காக கமிட் ஆனேன். கதையின் தேவைக்காக நாக்பூர் சென்று பரோட்டா போட கற்றுக்கொண்டேன். உடலளவிலும், தோற்றத்திலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி கடுமையாக உழைத்தேன். படத்தின் போஸ்டர் புகைப்படங்களை வெளியிட்டு, படம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக படம் டிராப் ஆனது. ஏன் அந்த படம் நிறைவேறவில்லை என்பது இன்று வரை எனக்கு தெரியவில்லை. இந்த சம்பவம் எனது சினிமா கனவுகளுக்கு கடும் தாக்கம் ஏற்படுத்தியது. அதனால் தான் சினிமாவை விட்டு விலகினேன்,” என்றார் யுவன்.
சினிமா கனவுகளை நம்பி உழைத்தும், எதிர்பாராத நிகழ்வால் பாதிக்கப்பட்ட யுவனின் இப்பொழுது வெளிவந்த இந்த பகிர்வு, திரையுலகில் அவருடைய நிலையை நினைவுபடுத்தி பலரது மனதையும் தொட்டிருக்கிறது.