சென்னை:
அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் தொடர்பான வழக்குகளால், நீதிமன்றத்தின் முக்கியமான நேரம் வீணாகின்றது என சென்னை உயர்நீதிமன்றம் கடும் வேதனை தெரிவித்துள்ளது.
நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கான இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அரசு அதிகாரிகள் இன்னும் அமல்படுத்தவில்லை எனக் குற்றஞ்சாட்டி, சங்கர் ஷா மற்றும் குமரேசன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை ஜூன் 6-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
வழக்கின் பின்னர் நீதிபதி உரையாற்றியபோது,
60% நீதிமன்ற நேரம் அரசு அதிகாரிகள் தொடர்பான வழக்குகளிலும்,
25% நேரம் அரசியல் வாதிகள் தொடர்பான வழக்குகளிலும்,
வெறும் 7% நேரம்தான் பொதுமக்கள் தொடர்பான வழக்குகளுக்காக செலவிடப்படுகிறது எனக் கூறி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
மேலும், “பொதுமக்களுக்கு பணி செய்வதே அரசு அதிகாரிகளின் முதன்மை கடமை. நீதிமன்ற உத்தரவுகளை கடைபிடிக்காமல் தவறுபடும் அரசு அதிகாரிகளுக்கு எந்த விதமான கருணையும் காட்ட முடியாது” என கண்டித்து, இத்தகைய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வழக்கு விரிவாக விசாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்