காவிரிக்கு தொடர்ந்து திமுக கலைஞர் முதல் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் வரையிலும் இன்று வரை துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் நயினார்.நாகேந்திரன் மன்னார்குடியில் பேச்சு .
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாஜக சார்பில் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் பாஜக மாநில தலைவர் நயினார்.நாகேந்திரன் , பாஜக மாநில துணை தலைவர் குஷ்பு சுந்தர் , மாநில பொது செயலாளர் , அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் . அப்போது பேசிய பாஜக மாநில துணை தலைவர் குஷ்பு பேசியதாவது திமுக கட்சி ரீதியாக தேர்தலில் தோற்று விடுவோம் என பயந்து கொண்டு இருக்கிறீர்கள் சார் என்பதன் முழு அர்த்தம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு தெரியாமல் உளறிக் கொண்டிருக்கிறார் . எஸ்ஐஆர் வந்தால் திமுக வாங்குகின்ற பொய்யான வாக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் . தமிழகத்தில் 94 லட்சம் பேரை நாங்கள் நீக்கி இருக்கிறோம் அந்த பாதிப்பு எங்களுக்கு இருக்காதா ? வருகின்ற தேர்தலில் அண்ணன் எடப்பாடியாரை முதலமைச்சராக உட்காரவைத்து விட்டு மீண்டு இதுபோல் வெற்றி விழா கூட்டம் கொண்டாடுவோம் என்றார் . அதனை தொடர்ந்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ். திமுக கட்சி ஆட்சியில் இருக்கிறார்கள் ஆட்சியில் இருப்பதற்கு தகுதி அற்றவர்கள் என்பதை சொல்வதற்கு காரணம் பொய்யை சொல்லி ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள் . பாரத பிரதமர் 100 நாள் லையை 125 நாட்களாக உயர்த்துவோம் என சொல்லி இருக்கிறார்கள் . திமுகவோ தமிழகம் முழுவதும் 100 நாள் வேலை கிடையாது என பொய்யை சொல்லி கொண்டிருக்கிறார்கள் என்றார் . அதனை தொடர்ந்து பேசிய பாஜக மாநில தலைவர் நயினார்.நாகேந்திரன் 1924 ஏற்பட்ட காவிரி பிரச்சனை இந்த மண்ணில் பிறந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 1924 ஆம் ஆண்டு பிறந்தார் அப்பொழுது ஏற்பட்ட பிரச்சனை 50 ஆண்டுகளாகியும் 1974 அன்று போடப்பட்ட காவிரி ஒப்பந்தத்தை அவர் புதுப்பிக்கவில்லை ஆனால் அவர் முதலமைச்சராக வந்த பிறகும் கூட காவிரியில் கபினி , ஹேமாவதி , சாரங்கி போன்ற அணைகளை கட்டும்போது கூட பார்த்துக் கொண்டிருந்தார் இன்று வரையிலும் பிரச்சனை தீரவில்லை ஆனால் இன்றைக்கு முதலமைச்சராக இருக்கூடிய மு க ஸ்டாலின் அவர்கள் தான் டெல்டா காரன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் இன்று வரை காவிரி பிரச்சனை இல்லை . ஒன்றியம் தோறும் தானியக்கிடங்கு அமைப்போம் என்று சொன்னார் டெல்டா பகுதிகளில் மழை வெள்ளம் வந்தது எல்லா பயிர்களும் முளைத்துக் கொண்டே போய்விட்டது இந்தக் காவிரிக்கு தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழகம் கலைஞர் முதல் இன்று முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின் வரையிலும் அன்றிலிருந்து இன்று வரை துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள் . நான்கு ஆண்டுகள் இருக்கும் போது இந்த பகுதியை எடப்பாடி பழனிச்சாமி வேளாண் மண்டலமாக அறிவித்தார் ஆனால் முக.ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருக்கும் போது ஸ்டாலின் அவர்கள் இந்த பகுதியை மீத்தேன் திட்டத்திற்கு ஒப்பந்தம் போட்டு கையெழுத்திட்டார் அவர் இன்றைக்கு முதலமைச்சராக இருக்கிறார் .525 தேர்தல் வாக்குறுதிகளை சொன்னார்கள் எத்தனை நிறைவேற்றி இருக்கிறார்கள் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் தருவதாக சொன்னார்கள் ஐந்தாண்டுகள் முடியும் பொழுது ஜூன் மாதம் தருவோம் என்று சொல்லி இருக்கிறார் .ஜூன் மாதம் யார் முதலமைச்சராக வரப் போகிறார் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் முதலமைச்சராக வர போகிறார் எடப்பாடி முதலமைச்சராக வருவதற்கு நீங்கள் என்ன வக்காலத்து வாங்குகிறீர்கள் .மன்னார்குடி என்று சொன்னாலே திருவாரூர் மாவட்டத்தில் பிறந்தாலே முக்தி கிடைக்கும் என்று சொல்வார்கள் திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் மன்னார்குடி ராஜகோபால சுவாமிகள் இதெல்லாம் இருக்கிறது என்று சொன்னால் இந்த மன்னார்குடியில் இன்றைக்கு கூடி இருக்கிற இந்த கூட்டம் கோட்டையிலே இருக்கும் ஸ்டாலின் அவர்களுக்கு அடிக்கப்படும் சம்மட்டி அடியாக தான் இருக்க போகிறது .உத்திரபிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி 17 சதவீதம் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள் அசாமில் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் 5 சதவீதம் அங்கு பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நாகாலாந்து மாநிலம் எந்த மாநிலத்திலும் எடுத்துக் கொண்டாலும் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் அதிகமாக இருக்கின்ற வட மாநிலங்களில் இன்னைக்கு பாரதிய ஜனதா கட்சி மட்டுமே ஆட்சியில் இருக்கிறது . இன்னும் ஆட்சி முடிய 2 மாதங்கள் தான் இருக்கிறது பத்திரிக்கையில் ரூ 50 லட்சம் கொடுத்துஅதை செய்ய போகிறோம் இதை செய்ய போகிறோம் என்று விளம்பரம் செய்கிறார்கள் . விளம்பரம் செய்து ஓட்டை வாங்கலாம் என நினைக்கிறார்கள் மக்கள் அதை நம்ப தயாராக இல்லை . ஒட்டுமொத்தமாக அனைத்து கட்சிகளும் சேர்ந்து மக்கள் சக்தியின் ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார் . மாநில தலைவர் நயினார்.நாகேந்திரனுக்கு வாள் மற்றும் வேல் பாஜக தொண்டர்கள் பரிசாக அளித்தனர்













