திருச்சி: திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை திருச்சி வருகை தந்தார்.
மாலை 5.45 மணிக்கு, டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் இருந்து அவர் ரோடு ஷோவை தொடக்கி, பொதுமக்களுடன் நேரடியாக சந்திப்பில் ஈடுபட்டார். சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள், கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன் பின்னர், முதல்வர் ஸ்டாலின் நடந்து சென்று, தலைமை தபால் நிலையம், கன்டோன்மென்ட், நீதிமன்றம், மாவட்ட அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து புத்தூர் சேர்ந்தார். அங்கு புதிதாக நிறுவப்பட்ட நடிகர் சிவாஜி கணேசன் சிலையை திறந்து வைத்தார்.
இதையடுத்து, தொடர்ந்த ரோடு ஷோவில், அவர் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம், ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபயணத்தில் ஈடுபட்டு, பொதுமக்களை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார்