மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை, ஏராளமான பெண்கள் பூஜை செய்து வழிபாடு..
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூரில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு ஆடி பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு
உலக அமைதி வேண்டியும், எல்லினோ தாக்கத்திலிருந்து மக்களை காத்திடவும், மழை வேண்டியும் 108 திருவிளக்கு பூஜையில் பெண்கள் குத்துவிளக்குகளை வைத்து மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்களால் அர்ச்சனை செய்து லலிதா சகஸ்ரநாமம் வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று மாங்கல்ய பாக்கியம் நிலைத்திடவும் அர்ச்சனை செய்து வழிபட்டனர். அக்கோவிலின் தலைவர் ரெங்கராஜ், தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொருளாளர் பாஸ்கர், செயலாளர் வழக்கறிஞர் சங்கரநாராயணன், உள்ளிட்ட ஏராளமான ஊர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.












