செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகே வரும் 23 ஆம் தேதி NDA கூட்டணி சார்பில் கூட்டணி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.இக்கூட்டத்திற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த பொதுக்கூட்டத் திடலை ஒன்றிய அமைச்சர் ட.முருகன் ஆய்வு செய்தார். இதில்.முன்னால் ஒன்றிய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில் வருகின்ற தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிப்பு பொதுக்கூட்டம் இங்கு நடைபெறுகிறது. எதிர்பார்த்ததை விட கூட்டணி கட்சியினர் அதிகளவில் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் 2026 யில் தூய்மையான நேர்மையான வளர்ச்சி மிக்க கூட்டணியாக இந்த கூட்டணி அமைந்துள்ளது என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
















