April 30, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

அருள்மிகு இருதயாலிஸ்வரர் திருக்கோயில்

by Satheesa
July 25, 2025
in Bakthi
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter


திருவள்ளுர் மாவட்டம் திருநின்றவூர் என்னுமிடத்தில் அருள்மிகு இருதயாலிஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
சிவனின் மூலஸ்தானத்திலேயே பூசலார் நாயனாரின் சிலை இருப்பது தனி சிறப்பு உண்டு.

பூசலார் நாயனார் இறைவனை தன் இதயத்தில் வைத்து பூஜித்து கோயில் கட்டியதால், இதயம் தொடர்பான நோய்களுக்கு இங்கு வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்குமென்ற நம்பிக்கை இருக்கிறது.நாயன்மார்களில் ஒருவரான பூசலார் திருநின்றவூரில் தலத்தில் பிறந்தவர். இவர் தினமும் அவ்வூரிலுள்ள சிவலிங்கம் ஒன்றை தரிசித்து வந்தார்.

மேற்கூரை இல்லாத அந்த லிங்கம் வெயிலிலும், மழையிலும் நனைந்தது. இதைப்பார்த்த பூசலாருக்கு சிவனுக்கு கோயில் கட்ட ஆசை எழுந்தது. இவரோ பரம ஏழை. எனவே சிவனை தன் மனதில் இருத்தி, தன்னிடம் ஏராளமான பணம் இருப்பது போல் கற்பனை செய்து கொண்டார். மனதுக்குள்ளேயே கோயில் கட்ட ஆரம்பித்தார்.

அந்தக் கோயிலில் இல்லாத பொருளே இல்லை. செய்யாத வசதியே இல்லை. மனம் காற்றை விட வேகமானது என்பர். மனம் நினைத்தால் ஒரே நாளில் கோயிலைக் கட்டி விடலாம். ஆனால், நாயனார் அவசரப்படவில்லை. உண்மையிலேயே ஒரு கோயில் கட்ட எத்தனை ஆண்டுகள் ஆகுமோ, அத்தனை ஆண்டுகள் இந்த கோயிலை கட்டினார்.

இந்த நேரத்தில் காஞ்சிபுரத்தில் ஒரு மன்னன் சிவனுக்கு உண்மையான கோயிலை கட்டி கொண்டிருந்தான். அவன் கட்டி முடித்த நேரமும், பூசலார் தன் மனக்கோயிலை கட்டி முடித்த நேரமும் ஒன்றாக அமைந்தது. இருவரும் ஒரே நாளில் கும்பாபிகம் நடத்த நாள் குறித்தனர்.

மன்னன் கட்டிய கோயில் கும்பாபிN~கத்திற்காக காஞ்சி மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான், “”நீ எனக்கு கோயில் கட்டியிருப்பது குறித்து மகிழ்ச்சி தான். ஆனால்,

இதே நாளில் திருநின்றவூரில் பூசலார் என்ற அடியார் கும்பாபிகம் செய்ய நாள் குறித்து விட்டார். நான் அந்த கோயிலுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே நீ வேறொரு தேதியில் கும்பாபிN~கத்தை வைத்து கொள்,”என்று கூறி மறைந்தார்.

திடுக்கிட்டு விழித்தான் பல்லவ மன்னன். கும்பாபிN~கத்தை நிறுத்திவிட்டு இறைவன் குறிப்பிட்ட திருநின்றவூருக்கு புறப்பட்டான். அங்கு சென்றதும் பூசலார்
என்பவர் இவ்வூரில் கட்டியிருக்கும் கோயில் எங்கே என விசாரித்தான். யாருக்கும் அது பற்றி தெரியவில்லை.

பின் பூசலாரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து அவரை வணங்கி, “”நீங்கள் கட்டியுள்ள கோயில் எங்கே உள்ளது? நேற்றிரவு சிவன் எனது கனவில் கூறினார். அதை தரிசிப்பதற்காக வந்துள்ளேன்,”என்றான். மன்னன் சொன்னதை கேட்டு பூசலாருக்கு மிகுந்த ஆச்சரியம் ஏற்பட்டது.

‘அரசே! சிவபெருமான் உங்கள் கனவில் கூறியதை கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கோயில் கட்டுமளவு என்னிடம் வசதி இல்லை. எனவே எனது உள்ளத்திற்குள் ஒரு சிவாலயம் கட்டி, இன்று கும்பாபிஷேகம் நடத்துவதாக கற்பனை செய்து கொண்டேன். இதைத்தான் சிவன் உங்களிடம் கூறியுள்ளார் என்றார்.இதை கேட்டதும் மன்னன் அதிர்ச்சி அடைந்தான்.

அன்பினால் மனதில் கட்டும் கோயிலுக்கும், பல லட்சம் செலவு செய்து கட்டும் கோயிலுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொண்டான். குறிப்பிட்ட நாளில் பூசலார் எழுப்பிய மனக்கோயிலில் சிவபெருமான் எழுந்தருளினார்.

அவரது இதயத்தில் நடந்த கும்பாபிN~கத்தை பக்தர்கள் அனைவரும் கண்டுகளித்தனர். அன்றே ஈசனின் திருவடியையும் அடைந்தார் அவர். சிவபெருமான் அவரை நாயன்மார்களில் ஒருவராக்கினார். பூசலாரின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் மன்னன் இத்தலத்தில் நிஜக்கோயில் கட்டி சிவலிங்கம் பிரதி~;டை செய்து அதற்கு இருதயாலீஸ்வரர் என்று திருநாமம் சூட்டினான்.

மகாசிவராத்திரி, தைப்பூசம், மகா சங்கராந்தி, பங்குனி உத்திரம், ஆருத்ரா தரிசனம், வைகாசி விசாகம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, பிரதோ~ம், கார்த்திகை,சித்திரை வருடப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, திங்கள், வெள்ளிக்கிழமைகள் இதயநோய் குணமாக திங்கட்கிழமைகளில் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Tags: bakthidivonationalgod siveniruthaliswarar templesven templetamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கர்ஜிக்கும் குரலின் கதை : ‘அய்யா ‘ திரைப்படமாகிறது ராமதாஸ் வாழ்க்கை !

Next Post

திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் கோவில் ஆடிப்பூர உற்சவம்தேர் திருவிழா

Related Posts

சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு
Bakthi

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026
ஆக்கூர் ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
Bakthi

திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி அம்மன் உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலய சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா 

April 29, 2026
ஆக்கூர் ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
Bakthi

சீர்காழி சட்டநாதர் சுவாமி  கோயிலில் பிரமோற்சவத்தின் 8 – ஆம் திருநாளாக இன்று திருத்தேரோட்டம்

April 29, 2026
ஆக்கூர் ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
Bakthi

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் சித்திரைமாத பூரத்தை ஒட்டி உற்சவர் அகோரமூர்த்தி மகாஅபிஷேகம் & மகாதீபாரதனை 

April 29, 2026
Next Post

திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் கோவில் ஆடிப்பூர உற்சவம்தேர் திருவிழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

0
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026

Recent News

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.