2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து தவெக தீவிர பரப்புரை பணிகளில் இறங்கியுள்ள நிலையில், அண்மையில் கோவையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்க விஜய் பயணித்தார். அவரை பின்தொடர்ந்த பல ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள், இரு சக்கர வாகனங்களில் வேகமாக பயணித்து ஒரு விபத்திலும் சிக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில், “எனது வாகனத்தை தலைக்கவசமின்றி பின்தொடர்வதும், பாதுகாப்பை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்றவை என் மனதை மிகுந்த கவலையடையச் செய்தது. இது மீண்டும் நடக்கக் கூடாது. இது கட்டளையாக எடுத்துக் கொள்ளப்படலாம்,” என விழிப்புணர்வு பாணியில் தனது தொண்டர்களுக்கு கேட்டுக்கொண்டார்.
மேலும், “பதட்டமாக இருக்கிறது.. ஆனால் மக்களின் நம்பிக்கையை வெல்லும் பொறுப்புணர்வும், திருப்தியும் எனக்குள் நிலவுகிறது” என்று விஜய் கூறியதும், புதிய தலைவருக்கான எதிர்பார்ப்பு மற்றும் உற்சாகத்தை உறுதிப்படுத்தியது.