மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செய்த நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபாடு:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மாமாக்குடி கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த 23ஆம்தேதி காப்பு கட்டுதலுடன் உற்சவம் தொடங்கி நாள்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அபிஷேகம் அலங்காரத்துடன் அம்மன் வீதி உலா காட்சி பத்து நாட்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தீமிதி திருவிழாவான இன்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்யப்பட்டது. தொடர்ந்து பெருமாள் கோவில் குளக்கரையில் சக்தி கரகம் புறப்பாடு செய்யப்பட்டது. காப்பு கட்டி விரதம் இருந்த திரளான பக்தர்கள் சக்தி கரகத்துடன் மேளதாள வாக்கியங்கள் வானவேடிக்கை முழங்க வீதி உலாவாக ஆலயம் வந்தடைந்தனர். அங்கு கோயிலுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டம் எதிரில் அம்மன் எழுத்தருளி காட்சி அளிக்க பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு அம்மன் வீதி உலா காட்சியும் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.













