விஜய் டிவி நிகழ்ச்சிகளான ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர் போன்றவற்றின் தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா. சிறந்த தொகுப்பாளராக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 16ம் தேதி தனது நீண்ட நாள் நண்பர் வசி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமண புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தவுடன், ரசிகர்கள் மட்டுமல்லாது பல பிரபலங்களும் வாழ்த்துகள் கூறி வாழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பிரபலமான சரத், பிரியங்காவைப் பற்றியும் அவரது திருமணத்தையு பற்றியும் உருக்கமான பகிர்வை செய்துள்ளார். “பிரியங்கா எப்போதும் தன்னை சுற்றி இருப்பவர்களை ஜாலியாகவும், கலகலப்பாகவும் வைத்திருப்பார். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், அவர் மிகவும் நெகிழ்வானவர். அவருடைய வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட சிரமங்கள் அதிகம். பிரியங்கா அழுகிறதை நாங்கள் பார்த்திருக்கிறோம். இப்போது அவர் வாழ்க்கையில் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது என்பதை அறிந்ததும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்,” என தெரிவித்துள்ளார்.
இந்த உருக்கமான பகிர்வு, பிரியங்காவின் ரசிகர்களிடையே மேலும் மனதைக் தொட்டுள்ளது.