மயிலாடுதுறையில் ஆய்வு கூட்டத்துக்கு வந்த அமைச்சர் செங்கோட்டையன், தவெக கட்சி நிர்வாகியின் மகன் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பு:- சிறுவன் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை நேபாளம் நிவாரணத்துக்காக வழங்கிய நிலையில் தானும் அந்த உண்டியலில் நிதி அளித்து அமைச்சர் பெற்றுக் கொண்டார்:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் எல்-நினோ பாதிப்புகளை எதிர்கொள்வது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். இதைத்தொடர்ந்து தஞ்சாவூரில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் செங்கோட்டையன் புறப்பட்டார். அப்போது தமிழக வெற்றிக் கழக நகர செயலாளர் ராஜ்குமார் என்பவரின் மகன் ஜோகித்-தின் எட்டாவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்க கட்சி நிர்வாகிகள் அமைச்சருக்கு அழைப்பு விடுத்தனர். இதனை ஏற்று பிறந்தநாள் விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு, சிறுவனுக்கு கேக் ஊட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது தானும் தனது சகோதரியும் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை நேபாளம் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக சிறுவன் வழங்கினார். அந்த உண்டியலில் தன் பங்கிற்கு பணத்தை போட்ட அமைச்சர் அத்தொகையை நிவாரண நிதியில் சேர்த்து விடுவதாக கூறி பெற்றுச் சென்றார்.

















