மயிலாடுதுறையில் அமைச்சரை சந்திக்க விடாமல், கைக்குழந்தையுடன் வந்த தவெக பெண் தொண்டரை, தடுத்து மிரட்டியதாக ஒன்றிய செயலாளர் மீது, பெண்மணி குற்றச்சாட்டு, அமைச்சர் தங்கியிருந்த விடுதி முன் பரபரப்பு :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பருவநிலை முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம், வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாகத்துறை அமைச்சர் கே எ செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்பு அமைச்சர் உணவு அருந்துவதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே அமைந்துள்ள, பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகைக்கு சென்றார். அங்க அவரை சந்திப்பதற்காக கட்சியின் பல்வேறு தரப்பு நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் வருகை தந்திருந்தனர். ஜமுனா என்ற பெண் உறுப்பினர் தனது கைக்குழந்தையுடன் வந்த பெண்மணியை, மணல்மேடு பகுதி தவெக ஒன்றிய செயலாளர் மனோகர் என்பவர் தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து உள்ளே வரக்கூடாது என்று அவரை வெளியே அனுப்ப முயற்சி செய்து, கடுமையான சொற்களால் பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜமுனா, பதிலுக்கு சத்தம் போட ஆரம்பித்தார், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, தொடர்ந்து வெளியே வந்த அமைச்சரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அமைச்சர் மாவட்ட ஆட்சியர் மற்றும் முக்கிய அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பைட்:-
ஜமுனா பெண் தொண்டர்

















