அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து தரக்குறைவாகவும், மானபங்கம் படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிடும் புதிய மாவட்ட செயலாளர் பசுபதி ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி முன்னாள் பெண் நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.
அதிமுகவில் சிவி சண்முகம் ஆதரவாளராக இருந்த
மாவட்ட கழக இணை செயலாளர்
ஆனந்தி அன்னாதுரை, தொகுதி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராதிகா, தகவல் தொழில் நுட்ப பிரிவு காயத்திரி, மகளிர் அணி செயலாளர் புனிதவள்ளி, மஞ்சுளா குமார், ஜெயதேவி உள்ளிட்டவர்கள் தலைமை மீதுள்ள அதிருப்தி காரணமாக அதிமுகவில் இருந்து விலகுவதற்கு முன்னதாக நேற்றைய தினம் சென்னை சென்று விலகல் கடிதம் கொடுப்பதற்கு முன்னதாக இவர்கள் அனைவரையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியிலிருந்து நீக்கினார். இந்நிலையில் அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்தவர்களை அதிமுகவின் விழுப்புரம் புதிய மாவட்ட செயலாளர் பசுபதி தரப்பினர் இழிவாகவும், தரக்குறைவாகவும், மானபங்கம் படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிடுவதால் பசுபதி ஆதரவாளர்கள், மற்றும் மாவட்ட செயலாளர் பசுபதி மீது நடவடிக்கை எடுக்ககோரி விழுப்புரம் எஸ் பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட முன்னாள் அதிமுக பெண் நிர்வாகிகள் கண்ணீர் மல்க புகார் மனு அளித்தனர்.
பேட்டி –














