சீர்காழி அருகே 3வீடுகள் எரிந்து 5லட்சம் பணம், 5பவுன் நகைகள் சேதம். தவெக மாவட்ட செயலாளர் நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.
சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அன்சாரி(45) என்பவர் அவருக்கு சொந்தமான காலிமனையில் நேற்று மாலை செடி,கொடிகள்,குப்பைகளை தீயிட்டு கொளுத்தியுள்ளார். அப்போது தீ பரவி அருகிலிருந்த செங்கேனி என்பவரது கூரை வீடு தீப்பிடித்து எரியத்தொடங்கியது. வீட்டிலிருந்த சிலிண்டர் வெடித்ததில் தீ பரவி அருகில் சந்திரா ,பக்கிரிசாமி ஆகியோரது கூரை வீடுகளும் தீப்பிடித்து எரிந்தது. மூன்று வீடுகளிலும் குழுவில் பெற்ற ரொக்க பணம் மொத்தமாக ரூ.5லட்சம் எரிந்து சேதம் அடைந்தது. மேலும் வீட்டிலிருந்து 5பவுன் தங்கநகைகள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் என அனைத்தும் தீயில் எரிந்து சேதம் அடைந்தனர். தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். அதற்குள் மூன்று வீடுகளும் முற்றிலும் எரிந்து சேதம் ஆனது சிலிண்டர் வெடித்ததில் வீடுகள் உள்ள சுவர்கள் இடிந்து கீழே விழுந்து தரைமட்டமாகின இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக தகவல் அறிந்த தவெக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் குட்டி கோபி உத்தரவின் பேரில் கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் பிரேம் குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏற்பாட்டில் 25 கிலோ அரிசி, காய்கறி,போர்வை, தலையணை,பாய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை மாவட்ட செயலாளர் குட்டி கோபி நேரில் சென்று வழங்கி ஆறுதல் கூறினார். மேலும் அவர்கள்
தற்காலிகமாக தங்குவதற்கான இடம் அருகில் ஏற்பாடு செய்ய கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார். வீடு எரிந்து பாதிப்புக்கு உள்ளான சாந்தி என்பவருடைய மகள் பிரசவத்திற்கு ரூ. 10 ஆயிரம் வழங்கினார். தொடர்ந்து தமிழக அரசு வீடு கட்டும் திட்டம் அறிவித்த பிறகு அவர்களுக்கு முன்னுரிமை அளித்து வீடு கட்டுவதற்கான ஆணை வழங்க ஏற்பாடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்து சென்றார்.














