மயிலாடுதுறை அருகே சிறுவர்கள் தங்கள் கைகளால் களிமண்ணால் விநாயகர் சிலைகளை ஆர்வமுடன் வடிவமைத்து விவசாயம் செழிக்க மழை பெய்ய வேண்டி பூஜை செய்து வழிபாடு நடத்தி பக்தி பரவசம்..மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயில்களில் 600 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபாடு;-
விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கோயில்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை நகரில் பல்வேறு ஆலயங்களில் சிங்கமுக விநாயகர், அஞ்சு தலைநாக விநாயகர், கற்பக விநாயகர், கஜமுக விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் சுமார் 10 அடி வரை விநாயகர் சிலைகளை பிரதிஷ்ட்டை செய்து படையலிட்டு பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். காவல்துறையில் அனுமதி பெற்று சுமார் 600 சிலைகள் கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களும் களிமண்ணால் விநாயகர் சிலைகளை செய்து ஆர்வமுடன் பிரதிஷ்டை செய்து படையலிட்டு உற்சாகத்துடன் வழிபாடு செய்து வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை அருகே பாக்கம் கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் விவசாயம் செழிக்க மழை வேண்டி களிமண்ணால் விநாயகர் சிலையை செய்து சிரிய பந்தல் அமைத்து அதில் விநாயகரை வைத்து பிரதிஸ்டை செய்து வழிபாடு செய்தனர். நமக்கு மழைபெய்தால்தான் விவசாயம் செய்யமுடியும், சாப்பாடு கிடைக்கும் என்பதால் விவசாயம் செழிக்க மழை வேண்டி வழிபாடு செய்வதாக சிறுவர்கள் கூறும் நிகழ்வை ஒருநபர் வீடியோவாக எடுத்து வாட்ஸ்அப்பீல் பதிவிட்ட வீடியோ வைரலாகியுள்ளது. விநாயகர் சதுர்த்தி நாளன்று சங்கரன்பந்தல் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அனைத்து விநாயகர்களும் தரங்கம்பாடி கடற்கரையில் விஷர்ஜனம் செய்யப்படவுள்ளது. மயிலாடுதுறை கோட்டத்தில் 15ஆம் தேதி விநாயகர் சிலை ஊர்வலமாக புறப்பட்டு நீர் நிலைகள் மற்றும் பூம்புகார் கடலில் கரைக்கப்பட உள்ளது. விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட இருப்பதால் மாவட்ட எஸ்பி சினேக பிரியா தலைமையில் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

















