திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் பழுதாகியுள்ள லிஃப்டை சரிசெய்ய கோரி வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.
மேலும் இந்த நீதிமன்றத்திற்கு தினந்தோறும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரகணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
மேலும் மூன்று அடுக்குமாடி கொண்ட இந்த நீதிமன்றத்தில் பயன்பாட்டில் இருந்த லிஃப்ட் கடந்த ஒரு வருட காலமாக பழுதாகி இயங்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக நீதிமன்றத்திற்கு வரும் முதியவர்கள், வழக்கறிஞர்கள் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் லிஃப்டை சரி செய்யக்கோரி வழக்கறிஞர்கள் பலமுறை துறைசார்ந்த அதிகாரிகளுக்கு முறையிட்டும் கோரிக்கை மனு அளித்தோம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு விரைந்து பழுதாகி உள்ள லிஃப்டை சரி செய்ய வேண்டும் என வழக்கறிஞர்களும், பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.














