கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்டக் காவல்துறை சார்பில் 10 முக்கிய சந்திப்புகளின் AI தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்- மேலும் கனிம வளங்கள் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்ல தமிழக அரசு தடை விதித்த நிலையில் தடையை மீறி கொண்டு செல்பவர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் தொடர்ந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்தார்.
விபத்தில்லா கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்குவதற்காக மாவட்ட காவல்துறை பல்வேறு முயற்சி எடுத்து வருகின்றனர். குறிப்பாக விபத்தை ஏற்படுத்தும் அதிக வெளிச்சம் ஓட்டும் விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்களில் இருந்து வண்ண விளக்குகள் போன்றவைகளை போலீசார் தொடர்ந்து பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் வாகனங்கள் இயக்கினால் அவரது பெற்றோர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கனரக வாகனங்கள் செல்வதற்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன இது போன்ற பல்வேறு நடவடிக்கையை மாவட்ட காவல்துறை எடுத்து வருகின்றன இதில் ஒரு பகுதியாக AI தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியும் கேமரா கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 முக்கிய சந்திப்புகளில் பொருத்தப்பட்டுள்ளது இந்த கேமராவானது அதிக வேகம் மற்றும் தலைக்கவசம் அணியாமல் செல்லும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் வகையில் இந்த கேமரா வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் சந்திப்பில் இந்த கேமரா பொருத்தப்பட்ட நிலையில் தற்போது அதை விரிவு படுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய 10 இடங்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன்படி இந்த கேமரா செயல்பாட்டை இன்று நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் இந்த நிகழ்வை தொடங்கி வைத்தார். மேலும் விபத்திலா கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்குவதற்காக காவல்துறையினர் பல்வேறு முயற்சி எடுத்து வருகின்றன இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் சாலையில் பாதுகாப்புடன் வாகனங்களை இயக்க வேண்டும், மது போதையில் வாகனங்கள் இயக்கக் கூடாது, போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு வாகனங்களை இயக்க வேண்டும் தலைக்கவசம் அணிந்து வாகனங்கள் இயக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். மேலும் கனிம வளங்கள் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்ல தமிழக அரசானது தடை விதித்துள்ளது இதற்காக எல்லையோர பகுதிகளில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது கேரள மாநிலத்திற்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல முயன்றால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.













