தமிழகத்தின் பக்கத்துக்கு மாநிலமான ஆந்திராவில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை தமிழகத்தை விட அதிகமாக தரப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு ஆந்திராவை போல உதவிதொகையை கூட்டி தர வேண்டும், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் 100 நாட்கள் வேலை கொடுக்க வேண்டும், தகுதியான அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து கோயம்பேடு பஸ் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை காவல்துறை கைது செய்து உள்ளது.
தங்களது உரிமைக்காக போராடும் மாற்றுத்திறனாளிகளை கலைந்து செல்ல வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தி உள்ளது ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அவர்களை காவல்துறை குண்டுக்கட்டாக கைது செய்து உள்ளது . கோட்டையை நோக்கி செல்ல முயன்ற மாற்றுத் திறனாளிகளை கோயம்பேட்டிலே கைது செய்யவிடும்படி உத்தரவிட்டுள்ளது திராவிட மாடல் அரசாங்கம்.
அதுமட்டுமின்றி சென்னையில் உள்ள சேப்பாக்கம் எழிலகத்தில் இன்று நடைபெறவதாக இருந்த கோட்டை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க மற்ற மாவட்டங்களிலிருந்து வந்த மாற்றுத்திறனாளிகளை பேருந்து நிலையங்களில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
தங்களது உரிமைக்காக போராட வந்த மாற்றுத்திறனாளி மக்கள் போராடக்கூட விடாமல் அவர்களை கைது செய்துள்ள தமிழக அரசு மீது அதிருப்தி அடைந்து உள்ளனர் பொதுமக்கள்.