கண்ணகி கோயில் தொடர்பான மாவட்ட கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், இந்து அமைப்பினர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் செல்போனில் தீவிரமாக கேம் விளையாடிக் கொண்டிருந்த அரசு மருத்துவமனை முதல்வரின் செயலால் அதிர்ச்சி
தமிழக – கேரளா எல்லைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 5000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் கண்ணகி திருக்கோயிலில் வருகிற மே 1 ஆம் தேதி நடைபெறும் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிநேக பிரியா, மாவட்ட வருவாய் அலுவலர், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், இந்து அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் தொடர்ந்து இந்து அமைப்பினர் தங்களது கோரிக்கைகளையும் முன்வைத்தனர்
இந்த நிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இதில் கலந்துகொண்ட தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் முத்துசித்ரா தனது செல்போனில் தீவிரமாக கேம் விளையாடிக் கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது
மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தை கண்டு கொள்ளாமல் தனது செல்போனில் கேம் விளையாடுவதை மட்டும் முக்கியத்துவம் கொடுத்து செல்போனில் மூழ்கியதால் அதிர்ச்சி ஏற்பட்டது













