தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் நடைபெறும் கண்ணகி கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழா
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு அமைப்பினருடன் ஆலோசனை
கண்ணகி கோயில் பெயரில் நன்கொடை வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எனவும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
தேனி மாவட்ட தமிழக – கேரளா எல்லைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 5000 அடி உயரத்தில் அமைந்திருக்கு மங்கலதேவி கண்ணகி திருக்கோயில் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் நடைபெறும் சித்ரா பௌர்ணமி திருவிழா நடைபெறுகிறது
இதற்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்தும் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் கலந்துகொண்டு பாஜக, இந்து முன்னணி, இந்து எழுச்சி முன்னணி, கண்ணகி அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்பினருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்
இந்தக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் கண்ணகி கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு கடந்த முறை உள்ளது போலவே இந்த ஆண்டும் முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது
கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சுலபமாக கோயிலுக்கு செல்லும் வகையில் ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும் திருவிழா தினத்தன்று மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளதால் பக்தர்களும், பொதுமக்களும் அதற்கு ஒத்துழைப்பு தந்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தார்
மேலும் நீதிமன்ற உத்தரவின் படி கண்ணகி கோயில் அறக்கட்டளை பெயரில் தனி நபர்களோ, அமைப்பினரோ வசூலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்
தொடர்ந்து இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகி கேரளா மாநிலம் வழியாக கோயிலுக்கு செல் வருவதால் அவர்கள் கடும் கட்டுப்பாட்டு விதிக்கப்படுகின்றனர், அதனால் கூடலூர் அருகே பனியங்குடி வழியாக 7 கிலோமீட்டர் தூரம் சாலை வசதி ஏற்படுத்தினால் பக்தர்கள் பொதுமக்கள் சுலபமாக சென்று வந்து விடலாம் என்றும் மேலும் நேர கட்டுப்பாட்டை அதிகரித்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்












