திருவாரூரில் வரும் மே 5ஆம் தேதி நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாட்டில் இந்திய துணைக் குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார் என திருவாரூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருவாரூர் மாவட்ட தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி…
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வரும் மே ஐந்தாம் தேதி திருவாரூரில் 43வது வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெறும் இந்த எழுச்சி மாநாட்டில், சுமார் ஒரு லட்சம் வணிகர்களுக்கு மேல் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று திருவாரூரில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அதன் மாவட்ட தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருவாரூர் மாவட்ட தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி கூறும் போது..
ஆழித்தேரோடும் திருவாரூரில் வருகின்ற மே ஐந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில மாநாடு, வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடாக நடைபெற உள்ளது. சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் மாநாடு பந்தல் அமைக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. நமது ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் ஒரு ஆன்மீக பூமியாகும். இதில் பல ஊர்களிலிருந்தும் பல மாவட்டங்களில் இருந்தும் குறிப்பாக வெளி மாநிலங்கள் ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்தும் வணிகர்கள் வரவுள்ளார்கள். இந்த மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு தருகின்றனர். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுதற்கு வசதியாக அன்றைய தினம் முழு கடையடைப்பு செய்து இந்த மாநாட்டில் தங்கள் குடும்பத்தாருடன் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக நமது இந்திய திருநாட்டின் துணை குடியரசுத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் வர உள்ளார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் புதிதாக அமைய உள்ள அரசிற்கு மறுநாளே அவர்களுக்கு ஒரு பாராட்டு தீர்மானத்தை கொடுக்கும் வாய்ப்பை இந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பெற்றிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநாட்டில் முக்கிய கோரிக்கையாக நான்கு அடுக்காக இருந்த ஜிஎஸ்டி வரிமுறையை இரண்டு அடுக்காக நமது நிதி அமைச்சர் மான்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்து வணிகர்களை மிகவும் மகிழ்ச்சியில் அழத்தினார்கள். அவர்களிடம் இதை ஒரே அடுக்காக ஒருமுனை வழியாக செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி வைத்துள்ளோம். இந்த கோரிக்கைதான் மத்திய அரசிற்கு நாங்கள் வலியுறுத்தும் மிகப்பெரிய கோரிக்கையாக்கும். மேலும் ஒவ்வொரு நகராட்சி பகுதிகளிலும் கடைகளுக்கு தொழில் வரி மற்றும் உரிமை கட்டண வரியும் வசூலித்து வருகிறார்கள். அதனை உரிமை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளோம். வணிகம் செய்யும் வணிகர்களுக்கு அவர்கள் 60 வயதை தாண்டினால் அவர்களுக்கு ஒரு இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்தி அவர்களுக்கு ஒரு உதவி தொகையும் கிடைக்க வேண்டும் என்று முக்கியமான கோரிக்கையை வைத்துள்ளோம். இந்த மாநாட்டிற்கு பிறகு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திற்கு சுற்றலா பணிகள் அதிகமாக இனிமேல் வரக்கூடிய வாய்ப்பை இந்த மாநாடு உருவாக்கும் என்பதில் எந்தவித அச்சமுமில்லை என்றார்.
பேட்டி: வி.கே.கே.ராமமூர்த்தி – தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருவாரூர் மாவட்ட தலைவர்












