April 29, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

Ind vs Eng தொடரில் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரிஷப் பண்ட் – ஐசிசி எடுத்த நடவடிக்கை என்ன ?

by Divya
June 24, 2025
in Sports
A A
0
Ind vs Eng தொடரில் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரிஷப் பண்ட் – ஐசிசி எடுத்த நடவடிக்கை என்ன ?
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய இளம்படை வீரர்கள் அபாரமாக ரன்கள் குவித்து வருகின்றனர்.

முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் சதமடித்து இந்தியா 471 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் மற்றும் கே.எல்.ராகுல் சதமடித்து, 364 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 465 ரன்கள் எடுத்த நிலையில், 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது இங்கிலாந்து விக்கெட் இழப்பில்லாமல் 21 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த போட்டியின் மூன்றாவது நாளில், 61வது ஓவரில் ஹாரி புரூக் முகமது சிராஜ் வீசிய பந்தை ஸ்லிப் பகுதியில் அடித்தார். பந்து பவுண்டரிக்குச் சென்றதையடுத்து, ரிஷப் பண்ட் பந்தின் வடிவம் மாறியுள்ளதாகக் கூறி நடுவரிடம் புதிய பந்து வழங்குமாறு கோரினார். எனினும், பந்தை பரிசோதித்த நடுவர், பந்தை மாற்ற தேவையில்லை எனத் தெரிவித்தார்.

இதனால் மனமுடைந்த ரிஷப் பண்ட், பந்தை வேகமாகத் தூக்கி எறிந்தார். பந்து நடுவரை தாக்கவில்லை என்றாலும், அவரது இந்த நடவடிக்கை ஐசிசியின் போட்டி நடத்தை விதிகளை மீறியதாகக் கருதப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, ரிஷப் பண்ட் ஐசிசி நடத்தை விதிகளில் நிலை 1 விதியை மீறியதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, ஐசிசியின் விதி 2.8 – நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் செயல்கள் – என்பதற்குரிய குற்றம் பண்ட் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

பண்ட், தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டு, ஐசிசி போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் பரிந்துரைத்த தண்டனையை ஏற்றுக் கொண்டதால், அவர்மீது ஒழுக்க நடவடிக்கை நடத்தப்படவில்லை. எனினும், அவரது ஒழுக்கப் பதிவில் ஒரு தகுதி இழப்புப் புள்ளி (Demerit Point) சேர்க்கப்பட்டுள்ளது.

இது பண்ட் கடந்த 24 மாதங்களில் பெற்ற முதல் குற்றமாகும். நிலை 1 விதி மீறல்களுக்கு, அதிகாரப்பூர்வ கண்டனம் அல்லது அதிகபட்சமாக போட்டிக்கான சம்பளத்தில் 50% அபராதம் மற்றும் 1 அல்லது 2 தகுதி இழப்புப் புள்ளிகள் வழங்கப்பட முடியும். ஒரே வீரர், 24 மாதங்களில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்றால், அவை தடை புள்ளிகளாக மாறி, போட்டியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுவிடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BCCIenglandind vs engindian test teamrishabh pant
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அரசுப் பள்ளியில் சிலிண்டர் வெடித்து தீ பரவல் – தூத்துக்குடியில் பரபரப்பு நிலை!

Next Post

5 முறை ஒத்திவைக்கப்பட்ட விண்வெளிப் பயணம் : இந்திய வீரர் நாளை புறப்படுகிறார்!

Related Posts

சத்தீஸ்கரில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் தமிழ்நாடுஅணி சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 7 மாணவர்களை அனுப்பினர்
News

சத்தீஸ்கரில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் தமிழ்நாடுஅணி சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 7 மாணவர்களை அனுப்பினர்

March 30, 2026
தேசிய அளவில் போல்வால்ட் போட்டியில் 4.22 மீட்டர் தாண்டி மாணவி புதிய சாதனை படைத்து அசத்தல்
News

தேசிய அளவில் போல்வால்ட் போட்டியில் 4.22 மீட்டர் தாண்டி மாணவி புதிய சாதனை படைத்து அசத்தல்

March 29, 2026
AVCகல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா 
News

AVCகல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா 

March 27, 2026
மாநில அளவில் சப் ஜூனியர் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் ஹாக்கி வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம்
News

மாநில அளவில் சப் ஜூனியர் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் ஹாக்கி வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம்

February 28, 2026
Next Post
5 முறை ஒத்திவைக்கப்பட்ட விண்வெளிப் பயணம் : இந்திய வீரர் நாளை புறப்படுகிறார்!

5 முறை ஒத்திவைக்கப்பட்ட விண்வெளிப் பயணம் : இந்திய வீரர் நாளை புறப்படுகிறார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

November 12, 2025
மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுககூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுககூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

April 5, 2026
திருவாரூர் அருகே பங்குனி திருவிழா நடத்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையிலும் பால்குடம் எடுத்துச் செல்ல தகராறு

திருவாரூர் அருகே பங்குனி திருவிழா நடத்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையிலும் பால்குடம் எடுத்துச் செல்ல தகராறு

April 5, 2026
திருவாரூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம்

திருவாரூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம்

April 5, 2026
சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

0
திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

0
ஆக்கூர் ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

மன்னார்குடி  அருகே  லாரி  உரிமையாளர்  கொலை வழக்கில் 7 பேர் கைது  மீதமுள்ள இரண்டு பேரை தேடிகின்றனர்

0
ஆக்கூர் ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி அம்மன் உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலய சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா 

0
சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

April 29, 2026
திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

April 29, 2026
ஆக்கூர் ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

மன்னார்குடி  அருகே  லாரி  உரிமையாளர்  கொலை வழக்கில் 7 பேர் கைது  மீதமுள்ள இரண்டு பேரை தேடிகின்றனர்

April 29, 2026
ஆக்கூர் ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி அம்மன் உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலய சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா 

April 29, 2026

Recent News

சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

April 29, 2026
திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

April 29, 2026
ஆக்கூர் ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

மன்னார்குடி  அருகே  லாரி  உரிமையாளர்  கொலை வழக்கில் 7 பேர் கைது  மீதமுள்ள இரண்டு பேரை தேடிகின்றனர்

April 29, 2026
ஆக்கூர் ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி அம்மன் உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலய சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா 

April 29, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.