சீர்காழி அருகே வேட்டங்குடியில் கணவன் தூக்கிட்டு தற்கொலை- மனைவிக்கு போலீஸ் வலைவீச்சு- ஆடியோ வைரலால் கள்ளக்காதலன் கைது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வேட்டங்குடி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் 44 இவருக்கும் மயிலாடுதுறை சேர்ந்த துர்கா தேவி.41 என்பவருக்கும் 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். வெங்கடேசன் கடந்து 2 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். 3 மாதங்களுக்கு முன்பு அவர் ஊர் திரும்பி உள்ளார். இந்நிலையில் மனைவி துர்கா தேவிக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலகுரு.40. என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்தது வெங்கடேசனுக்கு தெரிய வந்தது. இதனை கண்டித்ததால் 15 நாட்களுக்கு முன்பு துர்கா தேவி மயிலாடுதுறை உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். தொடர்ந்து துர்கா தேவியும், பாலகுருவும் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வெங்கடேசன் தனது வீட்டுக்குள்ளேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் இறப்புக்கு முன்பு செல்போன் வாட்ஸ் அப்பில் தனது சாவுக்கு பாலகுருவே காரணம் என பதிவிட்டிருந்தது வைரலாகி வருகிறது. இது குறித்து வெங்கடேசன் தாய் அலமேலு.60. புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் இறந்த வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிந்து பாலகுருவை கைது செய்தனர். மேலும் தலைமறைவான துர்கா தேதியை தேடி வருகின்றனர். வெங்கடேசன் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.













