ஐபிஎல் வீரர்கள் மீது சூதாட்டக் குழுக்கள் தாக்கம் செலுத்த முயற்சி – பிசிசிஐ எச்சரிக்கை, ACSU ரகசிய கண்காணிப்பு தீவிரம்.
இந்தியாவில் நடைபெற்று வரும் 18வது ஐபிஎல் சீசன், ரசிகர்களை கவரும் வண்ணமாக இருக்கிறது அதே நேரத்தில், சூதாட்டக் குழுக்களின் கண்களும் அதில் குவிந்து கொண்டிருக்கின்றன. கோடிக்கணக்கான ரூபாய்கள் சூதாட்டமாக இடம் பெற்றுவரும் நிலையில், பிசிசிஐ தனது வீரர்களை, சப்போர்ட் ஸ்டாஃப், மற்றும் அணியின் மற்ற உறுப்பினர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
சூதாட்டக் குழுக்களின் தந்திரங்கள் தற்போது மேலோங்கியுள்ளன. குறிப்பாக, ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரால் வீரர்களை அணுகும் முயற்சி நடைபெற்றுள்ளதாக Anti-Corruption Security Unit (ACSU) தகவல் வழங்கியுள்ளது. ரசிகர்கள் போல நடித்து, பரிசு அல்லது பணம் வழங்கி நட்புறவு ஏற்படுத்தும் இவர்களிடம், போட்டி தொடர்பான தகவல்களை பெற்றுச் சூதாட்டக்காரர்களுக்கு வழங்கும் அபாயம் உள்ளது.
இதைத் தொடர்ந்து பிசிசிஐ, 10 அணியினருக்கும் எச்சரிக்கை அறிவுரை அனுப்பியுள்ளது. “வீரர்களை மட்டுமல்லாது, அவர்களது குடும்பத்தினரையும் பரிசுகள் மூலம் வலைவைக்கும் முயற்சிகள் நடக்கலாம். எந்த சந்தேகத்திற்கிடமான அணுகலும் உடனடியாக தெரிவிக்க வேண்டும்” என்று ACSU வலியுறுத்தியுள்ளது.