கார்நாடக மாநிலத்தில் ‘சகலா மிஷன்’ என்கிற மக்கள் குறைதீர்க்கும் பிரிவின் இயக்குநரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான பல்லவி அக்ருதி கடந்த 10ம் தேதி, வளையொலியில் புடவை விற்பனை குறித்த வீடியோ ஒன்றை பார்த்து இருக்கிறார்.
அதில் மதுரையில் நெய்யப்பட்ட தரமான காட்டன் புடவைகள், குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக கூறப்பட்டு இருந்தது. மேலும் பல புடவைகள் அந்த வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்துள்ளது.
மேலும், விருப்பமான புடவையின் புகைப்படத்தை, ‘ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து, ‘வாட்ஸாப்’ எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பின், யு.பி.ஐ., செயலி வாயிலாக, 850 ரூபாய் செலுத்தவும் என கூறப்பட்டு இருந்துள்ளது. இதன்படி, பல்லவி அக்ருதி, 850 ரூபாயை செலுத்தி உள்ளார். அதில் தனது வீட்டின் முகவரியையும் குறிப்பிட்டு அனுப்பிட்டு உள்ளார்.
ஆனால், ஆர்டர் செய்து பல நாட்கள் கடந்தும், புடவை வரவில்லை. இதனால், குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், எந்த ஒரு பதிலும் அவருக்கு வரவில்லை. இதனால் கடந்த 17ம் தேதி பெங்களூரு கிழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.