தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஆசிபாபாத் மாவட்டத்தில் உள்ள ஜெய்னூர் மண்டலம் அத்தேசரா கிராமத்தைச் சேர்ந்தவர் அத்ரம் சத்ருஷாவ். இவர் அதே கிராமத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
அது மட்டுமின்றி கெரமேரி மண்டலத்தில் உள்ள சங்கி கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. ஒரு வருடமாக அந்த பெண்ணையும் காதலித்து வந்துள்ளார் அத்ரம் சத்ருஷாவ். இரண்டாவதாக காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்து 15 நாட்களுக்கு முன் அந்த பெண்ணை நிச்சயதார்த்தம் செய்து உள்ளார்.
இதனை அறிந்து பதறிப்போன முதல் காதலி ஆலோசனை மையத்தில் புகார் அளித்து உள்ளார். அவர்கள் அந்த 2 பெண்களையும் அவர்களின் காதலரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இருவரும் சத்ருஷாவை திருமணம் செய்வோம் என அடம்பிடித்து உள்ளனர்.
மேலும் அவர்களுக்கு குடும்பத்தினரும் அதற்கு சம்மந்தம் தெரிவித்து உள்ளனர். இதனை அடுத்து இவர்களது சொந்த கிராமத்தில் நடைப்பெற்ற கல்யாணத்தில் அத்ரம் சத்ருஷாவ் இரண்டு காதலியையும் திருமணம் செய்தார். அவர்களுக்கு அந்த ஊர் மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.