சமீபத்தில் காஷ்மீர் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு இந்திய மற்றும் பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு எதிராக சில முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் சிந்து நதி மற்றும் அதன் கிளை நதிகளில் தண்ணீரை நிறுத்தம் முடிவு பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
60 ஆண்டுகளுக்கு மேலாக அமலில் இருந்த இந்த ஒப்பந்தம், பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளது. உலக நாடுகளில் நதிநீர் ஒப்பந்தம் தொடர்பான முதன்மையான ஒப்பந்தங்களில் ஒன்று சிந்து நதிநீர் ஒப்பந்தம்.
சிந்து நதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்த நிலையிலும் உடனடியாக இதை நிறுத்த இயலாது . அதற்கான ஆரம்பகட்ட பணிகளை இப்போது தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. இப்பொழுது உள்ள சூழ்நிலையில் 5 முதல் 10 சதவீத நீரை நிறுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
நீரின் ஓட்டத்தை தடுக்க வேண்டுமெனில் பல அணைகள், கால்வாய்களை அமைத்து இந்திய பகுதிக்குள் தண்ணீரை திருப்ப வேண்டும். இதற்கு சில ஆண்டு ஆகலாம் என்று நம்பப்படுகிறது. இதன் மூலமாக பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருக்கும் பாகிஸ்தானை அடக்க முடியும் என்று இந்திய அரசு நம்புகிறது.