திருத்துறைப்பூண்டியில் மது போதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தையை பாட்டிலால் தலையில் தாக்கியதில் தந்தை சிகிச்சை பலனின்றி பலி. இச்சம்பவம் குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காமராஜர் தெருவை சேர்ந்தவர் கரிகாலன் 48 இவருக்கு மனைவி மற்றும் மகன் ஸ்ரீ குமரன் 18 மற்றும் ஒரு மகள் உள்ளனர் . சில ஆண்டுகளுக்கு முன்னர் கரிகாலனின் மனைவி மற்றும் மகள் தனது தாய் வீட்டிற்கு பிரிந்து சென்ற நிலையில் தந்தையும் மகனும் மற்றும் ஒன்றாக வசித்து வந்தனர் .
இந்த நிலையில் மகன் குடிக்கு அடிமையாகி உள்ளார் எனவும் இந்த நிலையில் நேற்று இரவு வேலைக்கு செல்லாமல் எங்கே சுற்றுகிறாய் என கேட்ட தந்தை கரிகாலனை அருகே இருந்த மது பாட்டிலை எடுத்து கரிகாலன் தலையில் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்ட அருகே இருந்தவர்கள் சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார்.
உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கரிகாலன் அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஸ்ரீகுமரனை தேடி வருகின்றனர்













