மன்னார்குடி அருகே லாரி உரிமையாளர் கொலை வழக்கில் 7 பேர் கைது மீதமுள்ள இரண்டு பேரை தனிபடை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர் …..
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கர்ணாவூர் ஊராட்சி அரவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 40) இவர் லாரி சொந்தமாக வைத்து ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் மதியம் வீட்டில் இருந்த இவருக்கு செல்போனில் பேசிய சிலர் உன்னிடம் தனியாக பேச வேண்டும் என அழைத்துள்ளதாகவும் இதனை அடுத்து சத்தியமூர்த்தி (42 ) அவரது இரண்டு சக்கர வாகனத்தில் மன்னார்குடி அடுத்த தரிசுவெளி என்ற பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்தவர்கள் லாரி செட்டில் என்ன பிரச்சனை என கேட்டபோது இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டள்ளதாக கூறப்படுகிறது இந்நிலையில் மர்ம கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாள், வாள் உள்ளிட்ட பலத்த ஆயூதங்களை எடுத்து சரமாரியாக வெட்டியதில் பலத்த காயமடைந்த சத்தியமூர்த்தி சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்துள்ளார் சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் உடலை மீட்டு அரசு மருத்துவமைனைக்கு கொண்டு சென்றுள்ளனர் தகவலறிந்து வந்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட், துணை கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேரில் சென்று பார்வையிட்டு தனிப்படை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.இதனை அடுத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்த தனிப்பட்டை போலீசார் பல்வேறு பகுதிகளில் குற்றவாளிகளை தேடிவந்தன குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க வலியுறுத்தி அரவத்தூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சாலைமறியல் பேராட்டத்தில ஈடுபட்டனர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திருவாரூர் அருகே பதுங்கி உள்ளதாக போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது இதில் கூத்தாநல்லூர் அடுத்த கோரையாறு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (28) இளமாறன் (34 )அரவிந்த் (23 )மற்றும் கூத்தாநல்லூர் மரக்கடை பகுதியை சேர்ந்த பிரவீன்,( 23 ) வினோத்குமார் (41) லெனின் (39) சூர்யபிராசாத் (23) உள்ளிட்ட 7 பேரையும் தனிப்படை போலிசார் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர் பின்னர் விசாரணையில் படுகொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர் அப்போது போலீசார விசாரணையில் கொலை செய்யபட்ட சத்தியமூர்த்தியும் கைது செய்யப்பட்ட மணிகண்டனும் மன்னார்குடி லாரி உரிமையாளர் சங்கத்தில் தனக்கு சொந்தமான லாரி வைத்து ஓட்டி வருகிறார்கள். இருவருக்கும் லாரி லோடு சுற்றுக்கு செல்வதில் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கர்ணாவூர் பகுதிக்கு மணிகண்டனின் நண்பர் அரவிந்த் (26) வேன் ஓட்டி சென்றுள்ளார்.அப்போது அவரை சத்தியமூர்த்தி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சத்தியமூர்த்தி மீது கோபத்தில் இருந்த மணிகண்டன், மற்றும் அவரது நண்பர் அரவிந்த் 7 பேருடன் வந்து சத்தியமூர்த்தியிடம் பேசியபோது கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த குற்றவாளிகள் போதை தலைக்கு ஏரிய நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் பலத்த ஆயுதங்களை எடுத்து சத்தியமூர்த்தியை கழுத்து , கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டி சாய்த்துள்ளதாக போலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது கணவர் கொலை குறித்து கேட்டதற்கு என் கணவரை கடந்த இரண்டு நாட்களாக இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது மர்மநபர்கள் பின் தொடர்ந்து வருவதாகவும் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் மாவட்ட எஸ்பி , மற்றும் மன்னார்குடி டிஎஸ்பியிடம் மனுக்கள் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார் இதுகுறித்து போலிசார் உரிய விசாரணை நடத்திருந்தால் என் கணவரை உயிருடன் காப்பாத்திருக்கலாம் என சத்தியமூர்த்தி மனைவி ஜெயமாலினி தெரிவித்தார்
குறிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சவளக்காரன் அரசு பள்ளி தற்காலிக உடற்கல்வி ஆசிரியர் மீது போக்சோ வழக்கு கொடுத்த் குறிப்பிடத்தக்கது ..
படம் பெயரின் அடிப்படையில் வரிசையாக அடுக்கபட்டுள்ளது
1, மணிகண்டன்
2, அரவிந்த்
3, இளமாறன்
4, லெனின்
5, சூர்யபிரசாத்
6, வினோத்
7, பிரவீன்













