தரங்கம்பாடி அருகே உள்ள உலக புகழ்பெற்ற திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி அம்மன் உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலய சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ்பெற்ற ஸ்ரீ அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. சிவபெருமான் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை சம்ஹாரம் செய்ததால் அட்ட வீரட்ட தளங்கள் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. தேவாரப் பாடல் பெற்ற இந்த கோவிலின் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 21ஆம்தேதி பஞ்சமுக கொடியேற்றத்துடன் துவங்கி உற்சவம் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக 8ம் திருநாளான இன்று தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவிலில் இருந்து அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து தருமபுரம் கட்டளை சிவகுருநாதன் தம்பிரான் சுவாமிகள், எம்எல்ஏ நிவேதா முருகன், அதிமுக வேட்பாளர் பவுன்ராஜ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேரானது நான்கு ரத வீதிகளையும் சுற்றி வளம் வந்து நிலையை அடைந்தது. இதில் அபிராமி பொதுநல சங்கம் சார்பாக கோடை வெய்யிலில் வடம்பிடித்து பக்தர்களுக்கு நீர்மோர் தர்பூசணி வழங்கப்பட்டது.













