தரங்கம்பாடி அருகே சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை செய்யும் வியாபாரியிடம் நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு, வாழைப்பழம் கொடுத்த வியாபாரி வாங்க மறுத்த குரங்கு நொங்கு கொடுத்ததும் மகிழ்ச்சியான உண்டு மகிழ்ந்த சுவாரஸ்ய நிகழ்வு.
தற்போது தமிழகமெங்கும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பொதுமக்கள் குளிர்ச்சியான பொருட்களை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர் அந்த வகையில் முதன்மையாக உள்ளது நுங்கு எந்த ரசாயன உரங்களும் இன்றி இயற்கையாகவே விளையும் இந்த நுங்கிற்கு கோடை காலங்களில் அதிக மவுசு உள்ளது எனவே தமிழகம் எங்கும் சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நொங்கு விற்கும் வியாபாரி ஒருவரிடம் அங்கு வந்த குரங்கு வியாபாரியின் மேல் ஏறி அவரை பிடித்து இழுத்து ஏதோ கேட்பது போல் சத்தமிட்டு சமிக்கைகள் செய்தது உடனே அந்த வியாபாரி தன்னிடம் இருந்த வாழைப்பழத்தை கொடுத்த நிலையில் அதனை வாங்க மறுத்து நொங்கு கேட்டு அடம் பிடித்தது கோடை வெப்பம் தாங்காமல் குரங்கு நொங்கு கேட்கிறது என்பதை அறிந்த வியாபாரி உடனே நுங்கினை எடுத்துக் கொடுத்தார் அதை வாங்கிக் கொண்டு மரத்தில் ஏறி மகிழ்ச்சியுடன் சாப்பிட்ட குரங்கு சாப்பிட்டு முடித்துவிட்டு மீண்டும் வியாபாரியிடம் வந்து நொங்கு கேட்டு அடம் பிடித்தது.சற்றும் சலிக்காமல் காலையிலிருந்து நுங்கு விற்பனை ஆகாமல் இருந்த போதும் மகிழ்ச்சியோடு குரங்கிற்கு நொங்கு கொடுத்து நுங்கு வியாபாரி மகிழ்ச்சி அடைந்தார் அருகில் இருந்தவர்கள் குரங்கின் இந்த செயலை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். மனிதர்களைப் போன்று குரங்குகளும் கோடை வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள நொங்கு கேட்டு அடம் பிடித்த இந்த நிகழ்வு காண்போரை வியப்படையச் செய்தது.













