இந்திய தொலைத்தொடர்பு துறையில் தற்போது பார்தி ஏர்டெல் Vs ரிலையன்ஸ் ஜியோ என சொல்லக்கூடிய வகையில் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், ஏர்டெல் எடுத்திருக்கும் புதிய முடிவு, ஜியோவுக்கு நேரடியான சவாலாக மாறியுள்ளது.
அதானியுடன் இணையும் ஏர்டெல்!
ஏர்டெலின் துணை நிறுவனம் பார்தி ஹெக்ஸாகாம் லிமிடெட், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து, 400 MHz ஸ்பெக்ட்ரம் உரிமையைப் பெறுகிறது. இந்த ஸ்பெக்ட்ரத்தை 2022 ஏலத்தில் அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் (ADNL) ₹212 கோடிக்கு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த மாநிலங்களில்?
- குஜராத் – 100 MHz
- மும்பை – 100 MHz
- ஆந்திரப் பிரதேசம் – 50 MHz
- ராஜஸ்தான் – 50 MHz
- கர்நாடகா – 50 MHz
- தமிழ்நாடு – 50 MHz
இந்த மாநிலங்களில் 26 GHz அலைவரிசையில் இந்த ஸ்பெக்ட்ரம் ஏர்டெல் மூலம் தற்போது செயல்பாட்டிற்கு வர இருக்கிறது.
ஏர்டெலின் வளர்ச்சி:
- TRAI அறிக்கையின்படி, 2025 ஜனவரியில், ஏர்டெல் மொபைல் மற்றும் வயர்லைன் சந்தாதாரர்கள் சேர்க்கையில் முதல் இடம் பிடித்துள்ளது.
- ஏர்டெல் பங்குகள் தற்போது ₹1,848.20 விலையைக் கொண்டுள்ளன.
- சந்தை மதிப்பு – ₹11.11 லட்சம் கோடி!
- சுனில் மிட்டல் – ₹13.8 பில்லியன் நிகர மதிப்புடன் முன்னணி தொழிலதிபராக இருக்கிறார்.
ஜியோவுக்கு கடுமையான சவால்:
முக்கியமாக, ஜியோவின் ஸ்பெக்ட்ரம் தரம் குறித்த விமர்சனங்கள் உள்ள நிலையில், ஏர்டெலின் இந்த நவீன அலைவரிசை ஒப்பந்தம் அதிக தரமான சேவையை வழங்கும் வாய்ப்பை உருவாக்குகிறது. ஏர்டெலின் இந்த அதானி ஒப்பந்தம், ஜியோவிற்கு சவாலாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.