சீர்காழியில் சங்கமம் 2026 என்ற பெயரில் 400கலைஞர்கள் பங்கேற்ற பிரமாண்ட உலக சாதனை பரதநாட்டிய நிகழ்வு நடைபெற்றது.இதனை ஜாக்கி புக் ஆப் வேல்ட் ரெக்காட்டு அமைப்பு அங்கிகரித்து சான்றிதழ் வழங்கப்பட்டது.
சீர்காழி புறவழிச்சாலையில் உள்ள தனியார் திறந்தவெளி புல்வெளி பசுமை அரங்கில் ஜாக்கி புக் ஆப் வேல்டு ரெக்கார்டு நிறுவனம் சார்பில் 4}வது ஆண்டு சங்கமம் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.
பரதநாட்டியத்தின் ஆதிநாதனான ஆதியோகியைச் சிறப்பிக்கும் வகையில், உலகிலேயே முதன்முறையாக ஆதியோகிக்கு நிகழ்தப்படும் நாட்டிய சமர்பணம்” என்ற உயரிய நோக்குடன் நடைபெற்ற இந்நிகழ்வில்,
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த 450 இளம் பரதநாட்டியக் கலைஞர்கள் ஒன்றிணைந்து, 15 அடி உயர ஆதியோகி உருவத்திற்கு முன்னர் ஒரே தாளத்தில், ஒரே அபிநயத்தில் தொடர்ந்து 10 நிமிடங்கள் பரதம் ஆடிய ‘கூட்டுப் படைப்பு’ அமைந்தது.
இந்த அசாதாரண சாதனை ஜாக்கி புக் ஆப் வேல்டு ரொக்கார்டு உலக சாதனைப் புத்தகத்தில் புதிய சாதனையாக அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகத் திரையுலகப் பிரபலமும் பாரம்பரியக் கலைஞருமான நடிகை இந்திரஜா சங்கர் மற்றும் ‘தொடர்வோம்’ அறக்கட்டளையின் நிறுவனரும் சமூக சேவகருமான டாக்டர் கார்த்திக் பழனிச்சாமி ஆகியோர் கலந்துகொண்டு, கலைஞர்களின் திறமையைப் பாராட்டிச் சிறப்பித்தனர்.
பாரம்பரியக் கலை வடிவமான பரதநாட்டியத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்த்த அனைத்துக் கலைஞர்களுக்கும், பயிற்சியளித்த குருமார்களுக்கும் விழாவின் நிறைவில் வேல்டு ரெக்கார்டு நிறுவனத்தின் நிறுவனர் ஜேக்கப் ஞானசெல்வன் மற்றும் சி.இ.ஒ. எஸ்தர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில், செயல் இயக்குநர்சீனிவாசன் மற்றும் தலைவர் பிரியா சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில்
உலக சாதனைக்கான அதிகாரப்பூர்வச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.













