மயிலாடுதுறையில் தொடர் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தென்னலக்குடி பாலம் அருகில் கடந்த மாதம் 27-ம் தேதி சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜேஷ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் புதுச்சேரி சாராயம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. உடனே சாராயத்துடன் காரையும் பறிமுதல் செய்த போலீசார், சாராயம் கடத்தி வந்த காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி தாலுக்கா, திருவேட்டக்குடி, காலனி தெருவைச் சேர்ந்த கலைச்செலவன் மகன் ரகுராமன்(46) என்பவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மதுவிலக்கு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதால் ரகுராமன் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சினேகாபிரியா மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த், சாராயம் கடத்திய ரகுராமனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவுபடி மதுவிலக்கு அமல்பிரிவு ஆய்வாளர் (பொறுப்பு) ராஜேஷ் மற்றும் போலீசார் ரகுராமனை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.













