கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச் சூடும் போட்டியில் கலந்து கொண்டு நான்கு தங்கப்பதக்கம் வென்று சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் ரயில்வே நிலையத்தில் மாணவிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது – கன்னியாகுமரி துப்பாக்கிச் சூடும் மன்ற நிர்வாகிகள் மாணவிக்கு மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து கௌரவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பாலபள்ளம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் செல்வமலர் தம்பதியினரின் மகள் ஹெலிஷா பாலா (18) பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வரும் இவர் சிறு வயது முதலே துப்பாக்கிச் சூடம் போட்டியில் கலந்து கொண்டு விளையாடுவது இலக்காக கொண்டுள்ளார் அதன்படி கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த துப்பாக்கி சுடும் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற மாநில துப்பாக்கிச் சூடும் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மட்டும் 75 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் 50 மீட்டர் முழங்கால் இருந்து துப்பாக்கி சுடுவது, தரையில் படுத்து இருந்து துப்பாக்கி சுடுவது மற்றும் நின்று கொண்டிருந்து துப்பாக்கி சுடுவது ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹெலிஷா பாலா மாணவி அனைத்திலும் வென்று நான்கு தங்கப்பதக்கங்களை கைப்பற்றினார். இதை தொடர்ந்து இன்று சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த நிலையில் அவருக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். உறவினர்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட துப்பாக்கிச் சூடும் மன்றம் நிர்வாகிகள் சார்பில் தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து கௌரவித்தனர். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாணவி கூறியதாவது : போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றதற்கு முழு காரணம் என்னுடைய தாய் தந்தையர் தான், தாய் தந்தையர் ஒத்துழைப்பு இல்லை எனில் என்னால் இந்த வெற்றியை பெற்றிருக்க முடியாது. நான் எட்டாம் வகுப்பிலிருந்து பயிற்சி பெற்று வருகிறேன். நான் படித்த பள்ளியில் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர் பள்ளியில் நடைபெறும் துப்பாக்கி சூடு போட்டிகளுக்கு என்னை ஆர்வமாக அனுப்பி வைப்பார்கள். நான் வெற்றி பெற்றதற்கு நான் படித்த பள்ளியும் ஒரு காரணம் தான் என்னுடைய கனவு தேசிய அளவிலான துப்பாக்கிச் சூடும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார்












